Friday 15 February 2008

தாய் தந்தை குரு வணக்கம்

நீங்கள் ஆத்திகரானாரலும் நாத்திகரானாரலும் இந்த தாய் தந்தை குரு வணக்கம் சொல்வது சிறப்பே!!!


உடல் தந்தாய் உயிர் தந்தாய் நல்லன்பு தந்தாயே!
உன் குருதி பாலாக்கி நல்லமுது தந்தாயே !!
கடமையெனத் தாழ்பணிந்தேன் காப்பாய் என் தாயே!!!
கண்கண்ட தெய்வம்நீ நல்லாசி அருள்வாயே.

கடலொத்த பேரன்பும் கல்வியும் நல்லொழுக்கமும்
காட்டிய நற்தந்தையே நின்காலடியில் வணங்குகிறேன்.

சுடராகி அறிவாகி மனம்தெளிய ஒளிதந்த
சற்குருவின் திருவடிகள் சரணடைந்தேன்.

No comments: